Saturday, June 19, 2010

என் மனம் உன்னால்...

வானம் தெரியாத
அமேசான் வனமாய்
இருந்த என்மனதை
வானத்தை பார்த்து
ரசிக்கும் அசோகவனமாய்
உன்வரவால் மாற்றினாயே..















வானத்தை பார்த்து
ரசிக்கும் அசோகவனமாய்
இருந்த என்மனதை
வானம் தெரியாத
அமேசான் வனமாய்
உன்பிரிவால் மாற்றினாயே..

4 comments:

Aathira mullai said...

வாசனின் இதய வீணையில் காதல் இசை மிக மென்மையாக இசைப்பது தெரிகிறது.. ஆவதும் அழிவதும் அவளாலே என்ற சான்றோர்களின் கூற்றுக்குச் சான்றாகிறது தங்கள் கவிதை.. கவிதையே உணர்வின் அடையாளம் தானே... அருமை... வாழ்த்துக்கள்..

elamthenral said...

இந்த பிரிவு யாரையும் விட்டு வைக்காது போல... அருமை... வாழ்த்துக்கள்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ஆதிரா,

ஆன்றோர்களின் கூற்று பொய்ப்பதில்லை...

உள்ளத்தின் உணர்வுகள் கவிதைகளாக மட்டும் இங்கு...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள புஷ்பா,

பரிவு காட்டுவதும்...
பிரிவு உண்டாகுவதும்...

வாழ்கையில் ஒன்றாகிவிட்டது...

யாரையும் விடுவதில்லை...

மிக்க நன்றி...