Thursday, June 24, 2010

வானவில்...


கண்களால் உன்னை எப்போ
காண்பேன் என்று நினைத்திருந்தேன்
மழையில் என்னை அதற்காக
முழுவதுமாய் நின்று நனைத்திருந்தேன்
மழையும் நின்றது...
நீயும் தோன்றினாய்....
வானத்தில் உன் வண்(ர்)ணத்தை
கண்டு என்னுள் மகிழ்ந்தேன்
மனதில் என் எண்ணத்தை
கொண்டு உன்னுள் கலந்தேன்
மண்ணில் காதலியை பார்த்தபின்பல்ல - நீ
விண்ணில் வில்லாய் பூத்தபின்பு…

6 comments:

elamthenral said...

nice poem.....

Aathira mullai said...

வானவில்லும் பெண்களின் முக நாண வில்லும் வர்ண சாலம் காட்டினாலும் கவிஞன் இயற்கையைத்தான் பாடுவானோ? அருமையான கவிதை வாசன்..மேலும் வளர வாழ்த்துக்கள்..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள புஷ்பா,

மிக்க நன்றி தோழி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ஆதிரா,

இவன் காதல் கொள்ளாததனாலோ?
இல்லை காதலை பிரிந்ததனாலோ?


தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி...

வைகறை நிலா said...

வானவில் கவிதைக்கு அற்புதமான புகைப்படம்..
வரிகளும் வானவில் வண்ணத்தில்..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள நிலா,

மிக்க மகிழ்ச்சி என்னின் வலைப்பக்கம் உலா வந்து மறுமொழி இட்டமைக்கு...

மிக்க நன்றி...