Thursday, December 9, 2010

நான்... நிலா... நீ...


பெண்ணே!

கருமையான வானில்
வெண்ணிற மேகத்தில்
தொலைந்து போகும்
நிலவாய் சிலநாட்கள்...

மாதத்தில் ஒருமுறை
வானத்தில் முழுமையாய்
மறைந்து போகும்
நிலவாய் சிலநாட்கள்...

விண்ணில் தோன்றியும்
கண்ணில் உருவாய்
தெரியாமல் போகும்
நிலவாய் சிலநாட்கள்...

எத்தனையோ நாட்கள்
என்னில் இப்படிநான்
நிலவினை போல் - உன்னால்
காணாமல் போகிறேன்.

5 comments:

Anonymous said...

காணாமல் போனது நிலவா?
நீங்களா??

கவிதை (காதல்) வரிகள் அற்புதம் வாசன்.

தமிழ்த்தோட்டம் said...

அருமை பாராட்டுக்கள்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இந்திரா,

நிலவோடு நானும் சேர்ந்து... காணாமல் தொலைந்து போக விரும்பி...


வலைப்பக்கம் வரக்கூடாது என்று நினைத்தாலும் வராமல் என்னால் இருக்க இயலாமல்...


மிக்க நன்றி....

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள தமிழர்களின் சிந்தனை களம்,

மிக்க நன்றி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள தமிழ்த்தோட்டம்,

மிக்க நன்றி....