Sunday, January 16, 2011

நீ எந்தன் மெளனமடி...


மெளனங்கள் இதயத்தோடு பேசியிருக்க
மென்மையாய் என்னருகினில் நீயிருக்க
வார்த்தைகள் உள்ளத்தோடு மறைந்திருக்க - உன்னோடு
வாழ்ந்திடும் இக்காலங்கள் சொர்க்கமடி...



என்னருகினில் நீயிருக்கும் தருணம்
உலகத்தையே மறந்துபோகும் எனக்கு
உன்னோடு பேசுவதற்கு வார்த்தைமட்டும் - எங்கிருந்து
என்னுள் இக்கணம் தோன்றுமடி...


இதயம் எத்தனையோ சொல்வதற்கு துடித்தாலும்
இப்பொழுது நம்மில் இட(ம்மா)றிபோகும் இச்சமயம்
எப்பொழுதும் துடிக்கும் இதயமும்சற்றே செயலிழுந்து - வார்த்தைகள் எல்லாமே செயலாய் உன்னிடம் காட்டசொல்லுதடி...

8 comments:

தினேஷ்குமார் said...

உங்கள் மௌனம் பேசுகிறது வரிகளில் அருமை ..........

கமலேஷ் said...

ரொம்ப நல்லா இருக்கு வாசன்..

ரொம்ப நாள் ஆகி போச்சி வலை பக்கம் vanthu.

pongal vaalthukkal.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

கவிதை அருமை ஸார்!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள தினேஷ்குமார்,

மிக்க நன்றி...

மெளனம் உங்கள் பின்னூட்டங்களின் வழி பேசுவதை நான் விரும்பிக்கொண்டு...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள கமலேஷ்,

மிக்க நன்றி...

நலமா நண்பா?

மறக்காமல் இருப்பதே சந்தோஷம் நண்பா.

தங்களுக்கும் என் மனமாந்த நல்வாழ்த்துகள்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ராமமூர்த்தி,

மிக்க நன்றி...

தங்களின் இனிய வரவிற்கும் மற்றும் பின்னூட்டத்திற்கும்...

தங்கள் வலைப்பக்கத்தில் வலம் வந்தேன் ராகம் அறியாதவன் என்றாலும் இசையில் மயங்கியபடி...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

ஒவ்வொன்றும் அருமை..
ரசித்துப் படித்து....

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள தோழி பிரஷா,

மிக்க நன்றி...

எல்லாவற்றையும் படித்து ரசித்தமைக்கு...


மிக்க மகிழ்ச்சி....