Tuesday, January 18, 2011

உன்னாலே... உன்னாலே...

நானென்ன நவீனகால குந்திதேவியா?
உன்விரல்களும் என்னை தீண்டாமலே
பார்வைபட்டதுமே கருவினை இதயத்தில்சுமந்து - கவிதையாய்
பலகர்ணன்களை பெற்று எடுத்துக்கொண்டே...



மந்திரங்களை உதடுகள் உச்சரிக்கதான் சக்திபெறும்
ஒலிக்காத உன்னுதட்டில் உயிர்பெறுகிறது என்தேகம்
மோகங்கள் பேசாமல் மெளனங்கள் பேசிக்கொண்டு - உன்பார்வையென்ன
காதல்ம(த)ந்திரமா? ஓயாமல் என்னுடலில் ஒலித்துக்கொண்டே...




காற்றுக்கும் பிடிக்கவில்லையோ நாம்பழகுவது
நம்மிடைபுகுந்து தொந்தரவு செய்துக்கொண்டு
இடைவெளியை குறைக்கசொல்லியா அவை? - பூமிதனில்
காற்றினையும் வென்றிடுவோம் கட்டியணைத்தே...

2 comments:

Unknown said...

அருமை அருமை..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ஜெ.ஜெ,


மிக்க நன்றி சகோ...