Tuesday, June 1, 2010

உன் குரலிசை...

குயில்பாட்டு அறியாத குயிலா நீ!
குழலோசை கேளா குழலா நீ!
குரலிசை உணரா குமரியா நீ!
குழலிசையை தனியாய்கேட்க விரும்புகின்றாயே நீ!

உன்குரலை தனிமையில் கேட்டதில்லையோ நீ!
உன்கண்களை மூடிக்கொண்டு பேசிவிடு நீ!
குழலிசையும் குழைந்ததாய் மயங்கிபோவாய் நீ!!! - உறங்கிட
குயில்களும் உன்குரலையும் வீட்டையும் தேடியே...

2 comments:

க.பாலாசி said...

நல்லாருக்குங்க வாசன்....

//உறங்கிட
குயில்களும் உன்குரலையும் வீட்டையும் தேடியே...//

மிக ரசித்தேன்....

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள பாலாஜி,

மிக்க மகிழ்ச்சி தங்களின் வாழ்த்திற்கு...

தாங்கள் ரசிக்கும்படி எழுதியதில் எனக்கும் மகிழ்ச்சி...

நன்றியும் ... வணக்கமும்...