Wednesday, October 6, 2010

தங்கம்...

அன்று
சவரன் இரண்டாயிரத்துக்கு
வாங்கியவன்...

இன்று
கிராம் இரண்டாயிரத்துக்கு
வாங்குகின்றான்...

தன்பிள்ளைகளுக்கு வேண்டியதை செய்து
திருமணம் முடிக்க இயலாமல்
கிராம்கூட வாங்க வழியில்லாமல்
துடிக்கும் கூட்டம் ஒருபுறமிருக்க!

தான்வாங்கிய சவரன்கள் குறையென
புதுவடிவம் மலிவுவிலை அழகாய்
எங்கு கிடைக்குமென்று நாளும்
தேடிஅலையும் கூட்டம் ஒருபுறமிருக்க!

நாட்டிற்கு ஒருகடை திறந்து
ஊருக்கு ஒருகடை திறந்து
முக்கிய சாலைக்கெல்லாம் திறக்கின்றான்...
கடையாய் இருந்தாலும் மக்கள்
வராமல் போகலாம் என்றெண்ணி - பொன்னைவிட
மின்னும் மாளிகைகளாய் ஒருபுறம்...

0 comments: