Friday, October 22, 2010

வெட்கம்...

வெட்கம்

நாணலை போல் நாணம் கொண்டு தலைகவிழ்ந்தாய்
கானலை போல் காணாமல் போகிறேன் உன்னோடு...

***************

தலையணை

அன்று உன்மீது கொண்ட அன்பால்
முத்தத்தால் நனைந்த தலையணை!
இன்று என்னோடு இல்லாத காதலால்
கண்ணீரால் நனைந்துக்கொண்டு!!

***************


உந்தன் உணர்வுகளை ரசிக்க தெரிந்த
பின்புதான் உன்னை நான் நேசிக்கிறேன்...
உன்னை உள்ளத்தை ரசிக்க தொடங்கிய
பிறகு உணர்வற்ற ஜடமாய் போகிறேன்...
உணவாய் உன் உணர்வுகள் மட்டும் என் மனதுக்கு.

***************

நீயும்... நானும்

உடல் மட்டும் தானே தள்ளி அமர்ந்திருப்பது....
உள்ளம் என்னவோ என்னுள் தானே இருப்பது...
உடல்கள் உரசாமல் போனாலும் - மனம்
சரசம் கொள்ளாமலா போகும்...

2 comments:

எஸ்.கே said...

கவிதை மிக அழகு! உங்கள் எழுத்து சிறப்பாகி கொண்டே போகிறது!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சுரேஷ்,

மிக்க நன்றி நண்பரே....


எல்லாம் தங்களை போன்றவர்களின் உற்சாகம் மற்றும் ஊக்கமே முழுக்காரணம் என்பது மட்டும் உண்மை...