Tuesday, October 26, 2010

சந்திப்பு (பழைய காதலன் காதலி)

அன்று...
கோயில் பிரகாரம்
அமைதியான நடைபாதை
கனவான வாழ்கையாய்
கண்ணில் காண்கிற
தம்பதியர் எல்லாம்
நீயும் நானுமாய்
மனத்தில் திரிந்து...

இன்றும்...
நிகழ்வான வாழ்வில்
தம்பதியராய் இல்லாவிடினும்
நேற்றைய நினைவுகளுடன்
இறைவன் சன்னதியில்
நீயும் நானும்
மண்ணில் மறையாத
அன்பில் ஒன்றிணைந்து...

2 comments:

எஸ்.கே said...

//மண்ணில் மறையாத
அன்பில் ஒன்றிணைந்து..//அருமை!!
பிரிந்த காதல் சந்திப்பு சிறப்பாக உள்ளது!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சுரேஷ்,

மிக்க நன்றி...

உள்ளத்தின் உணர்வுகளும், அன்பும் என்றும் அழியாத ஒன்று...