Tuesday, November 23, 2010

நினைவுகளால்....

கோடைக்காலம் போன்று
பகல்நேரங்கள் உன்நினைவால்
என்னுள் நீண்டுக்கொண்டு
அதில்!
ஒவ்வொரு நொடியும்
என்வாழ்வில் துடிதுடித்து
நான் இறந்துக்கொண்டு
ஆனால்...
ஒவ்வொரு நாளும்
இரவுநேரத்தில் மீண்டும்
மீண்டும் பிறந்துக்கொண்டு....

8 comments:

சிந்தையின் சிதறல்கள் said...

நினைவுகளோடு நிலைப்பதே
வழ்க்கையாகிவிட்டதே...

Anonymous said...

நினைவுகளில் மூழ்குவதும் ஒரு சுகம் தானே..

எஸ்.கே said...

மிக அருமை!

நட்புடன் சௌம்யா.. said...

கவிதைக்கு பொருள் தந்த கலைவாணர்.....என்று பட்டமே கொடுக்கலாம்
திரு. தஞ்சை வாசன் அவர்களே ......
உங்கள் கவிதைகள் அனைத்துமே மிகவும் அருமையாக உள்ளன .....
நன்றி ......

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ஹாசிம்,

மிக்க நன்றி...

நினைவுகளும், கனவுகளும் தான் வாழ்க்கை ஆகின்றது...

கனவுகளும் ஒருநாள் நினைவுகள் ஆகுமென்ற என்ற கனவோடு...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இந்திரா,

மிக்க நன்றி...

தூங்காத நேரங்களில் நினைவுகளில் மூழ்குவதும்...

தூங்கும் நேரங்களில் கனவுகளில் மூழ்குவதும்...

என்றென்றும் சுகம்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சுரேஷ்,

மிக்க நன்றி...

என்றென்றுமான தங்களின் இனிய வாழ்த்திற்கு...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள விழிகளுக்கு,

என்னுடைய எழுத்துகளை படித்து, ரசித்து பாராட்டிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்...

என்றென்றும் உங்கள் ஊக்கத்தை எதிர்நோக்கி...

//கவிதைக்கு பொருள் தந்த கலைவாணர்.....என்று பட்டமே கொடுக்கலாம்
திரு. தஞ்சை வாசன் அவர்களே ......//

ஆமாம்...எத்தனை நாளா என்னை பழிவாங்க இந்த திட்டம்...