Saturday, November 27, 2010

விதி மாறும்...


தோழியே!!!
ெயரினில் கொண்டதனாலா
வாழ்வில் அடையாமல்போனாய்?
ணவனால் நடைப்பிணமானாய்
காதலனால் படுத்தபிணமானாய்
ஒருவன் வெட்டியானாய்
பிணத்தின்மீது காதலென்றுசொல்லி...
அவனும் இன்றும்
தன்னுடலை மாய்த்துவிட்டு
உன்னுயிரை எடுத்துசென்று
உன்னோடு உயிரைவிட்டு
உன்னை கொன்றுக்கொண்டு
உன்பெயரினை யாருரைத்தாலும்
நீயேயுரைத்து பார்த்தாலும்
அடையாதபடி செய்துவிட்டு...

இன்றுவரை நீயடையாத
அமைதியினி மயானமான
உன்னுள்ளத்தில் தோன்றட்டும்
நடந்ததெல்லாம் மறக்கட்டும்

இனியாவது இறையருளால்
உன்மனத்தின் குற்றயெண்ணம் 
முழுமையாய் மறையட்டும்
உன்காலம் மாறட்டும்.
உன்வாழ்வு மலரட்டும் - உற்றதுணையாக
உன்னோடு நாங்களும்...



அவனது ஆத்மா சாந்திடைய
எந்தன் கண்ணீர்அஞ்சலிகள்…
உனக்கு வரிகளின் வழியே
எந்தன் ஆறுதல்கள்…

2 comments:

எஸ்.கே said...

அற்புதம் சார்!
அருமையான கவிதை!
இப்போதெல்லாம் தங்கள் எழுத்துக்களில் உணர்ச்சிகள் மேலிடுகின்றன! படிப்பவருக்கும் பல உணர்வுகளை கிளறிவிடுகின்றன!

KANA VARO said...

நல்ல கவிதை