Monday, November 22, 2010

மாறும் என்ற நினைவோடு...

பெண்ணின் மனதினை
ஆண்கள் புரிந்துக்கொள்வது
என்பது கடினம்தான்
முடியாத ஒன்றும்தான்
ஆழம் தெரியாத கடலாய்...

ஆனால்!
எந்தன் இதயத்தையும்
உன்னால் எப்படி
புரிந்துக்கொள்ள முடியாமல்
போய்விடக்கூடும்?
மனதுக்குள் புரியாத புதிராய்

புரிந்தும் புரியாமலா?
நான் உன்னை
புரிந்துக்கொள்ள முடியாமல்
இதனையும் நேசித்துக்கொண்டே
வாழ்க்கை என்னுள் நம்பிக்கையாய்.

6 comments:

சிந்தையின் சிதறல்கள் said...

நம்பிக்கை வீண்போகாது காத்திருங்கள்

VELU.G said...

நம்பிக்கை தான் வாழ்க்கை

Thangarajan said...

உங்கள் கவிதைகள் நன்றாக உள்ளது.வாழ்த்துக்கள்.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ஹாசிம்,

மிக்க நன்றி...

கை கொடுக்கும் கை.... நம்பிக்கை...

காத்திருத்தல் சுகம் தானே...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள வேலு,

மிக்க நன்றி...

வாழ்க்கையின் அச்சாணியே நம்பிக்கை தான்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள தங்கராஜன்,

அப்பா! தங்களின் இனிய முதல் வரவிற்கும் மற்றும் உங்கள் உள்ளம் கனிந்த வாழ்த்துக்கும் என்றும் என் மனமார்ந்த நன்றிகள்...

தொடர்ந்து உங்கள் வரவையும் ஊக்கத்தையும் வேண்டி இவன்...