Saturday, November 27, 2010

வழி(லி) மாறாமல்...

 














கண்ணா!!!
ீசிய காற்றில்
உன்மீது விழுந்தேன்!
கல்மீது விழுந்திருந்தால்
ஊர்ந்தாவது சென்றிருப்பேன்!!
உன்கண்ணீர் கடல்மீது
அன்பாய் விழுந்தனாலோ?
தத்தளித்து வாழ்ந்தாலும்
உன்னோடுவாழ ஆசைக்கொள்கிறேன்
நீயென்னை கரைசேர்த்திட
நினைத்தாலும் நடந்திடாமல்
சக்கரைக்குள் மடிந்துபோகும்
எறும்பாய் உயிரைவிட்டுக்கொண்டு...
கண்ணீரையும் கற்கண்டாய்
மரணத்தையும் சுவைத்துக்கொண்டு...   

3 comments:

சிந்தையின் சிதறல்கள் said...

ஏனிந்த சுகமான சோகம்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ஹாசிம்,

மிக்க நன்றி...

சோகத்தின் சுகம் இதமாய் மனதுக்குள்...

பிறரின் சோகத்தில் பங்குகொள்ளுவ்வொம்...
ஆறுதலை சொல்வ்வொம்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சுரேஷ்,

மிக்க நன்றி...

தங்களின் தொடர்ச்சியான ஊக்கத்திற்கு.