Sunday, March 13, 2011

என்னருகில் நீவேண்டும் என்றென்றும்....



எப்பொழுதும் உனைகண்டபின்
உதட்டில் என்சொல்லும்
உடம்பில் என்செயலும்
அகத்தில் அன்பிருந்தும்
என்னசெய்வ தென்றுயறியாது
ஊனமடைந்து போகும்..

ஆனால்!
காணாத பொழுதுகளில் உனையெண்ணி
கலங்கியே கண்ணீர்விடும் கண்கள்
ஏனோ? இம்முறை நேரில்
உன்னை கண்டபின்பு கலங்காது
கல்லாய் அசையாமல் போனதேன்

கண்ணீர்குளமும் வற்றாமலே பாறையானதே - எல்லாம்
உன்அன்பு செய்யும் மாயம்தானோ?

3 comments:

Anonymous said...

//எப்பொழுதும் உனைகண்டபின்
உதட்டில் என்சொல்லும்
உடம்பில் என்செயலும்
அகத்தில் அன்பிருந்தும்
என்னசெய்வ தென்றுயறியாது
ஊனமடைந்து போகும்..//

அப்டினா காணாதபோது இதெல்லாம் நடக்குறதில்லையோ????
நல்லா ஆக்சன் பண்ணுவீங்க போலயே..

Anonymous said...

//காணாத பொழுதுகளில் உனையெண்ணி
கலங்கியே கண்ணீர்விடும் கண்கள்
ஏனோ? இம்முறை நேரில்
உன்னை கண்டபின்பு கலங்காது
கல்லாய் அசையாமல் போனதேன்
கண்ணீர்குளமும் வற்றாமலே பாறையானதே - எல்லாம்
உன்அன்பு செய்யும் மாயம்தானோ?//


அவ்ளோ பாசக்கார புள்ளையா????
ம்ம்ம்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இந்திரா,

மிக்க நன்றி...

தாங்கள் விரும்பும் விதத்தில் படம் தேர்வு செய்தது எனக்கு மகிழ்ச்சி....

காணும் போதும் நோ ஆக்சன்... காணாத போதும் நோ ஆக்சன்...


பாசம் வேஷம் இல்லாமல் இங்கே... அவளிடம்...