Thursday, May 27, 2010

பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - 1


நண்பனாக அவனிருந்திருந்தால்
தூய்மையான மனதுடன்
கைகுலுக்கி பரிசினை
வழங்கி வாழ்த்தினை
சொல்ல நினைத்திருப்பான்...



இல்லை....
காதலனாக அவனிருந்திருந்தால்
அன்பான எண்ணத்துடன்
கட்டியணைத்து முத்தம்
கொடுத்து வாழ்த்தினை
சொல்ல நினைத்திருப்பான்...


ஆனால்,
இரண்டும் இல்லாமல்
வாழ்த்தினை சொல்லலாமா?
வேண்டாமா? என்று
இருதலை கொல்லிஎறும்பாய்
ஏக்கமான நினைவுகளுடன்
மனதுடன் தவித்துக்கொண்டு
இங்கே இவன்...

12 comments:

அ.முத்து பிரகாஷ் said...

சொல்லிவிடுங்கள் தோழர்...
தயக்கம் வேண்டாம் ...
அன்புடன் நியோ

Anonymous said...

oru arimugamana saka tholanaaka sollalaamea...saathaaranamaaka...

pon

elamthenral said...

மிக அருமையான கவிதை... வாழ்த்துக்கள்!

அண்ணாமலை..!! said...

யாருக்கான கேள்வியொடு தொக்கி நிற்கிறது
இந்தக்கவிதை?? :)

வாழ்த்துகள்!!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள நியோ,

சொல்லிவிட்டேன்...

தங்களின் வரிகள் கவிதைக்கும் எனக்கும் அளிக்கும் ஊக்கமாய்...

மிக்க நன்றி நண்பா...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள பொன்,

சொல்லிவிட்டேன்...

மிக்க நன்றி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள புஷ்பா,

தங்களின் அழகான பாராட்டிற்கு என் மனமார்ந்த நன்றிகள்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள அண்ணாமலை,

அது ஒரு ரகசியம்.... பொது இடத்துல அத பற்றியெல்லாம் கேட்ககூடாது... (அவனின் முன்னால் காதலிக்குனு நான் சொல்லவேமாட்டேன்....)

Bharthi Raja said...

Ennamoo Srini... Enna na moo nadakuthu...

Sakthi Doss said...

superbbbbbb!!!!!!!!!!!!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள பாரதி,

எது நடந்ததோ நன்றாகவே நடந்தது...
எது நடக்க இருக்கின்றதோ நன்றாகவே நடக்கும்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சக்தி,

மிக்க நன்றி...