Sunday, May 30, 2010

ஓரவஞ்சனை...


மழையே!

உனக்கும் ஏன் இந்த
ஓரவஞ்சனை...
என்னவளை போல்...
என்னின் ஓர்கன்னத்தில்
மட்டும் அளித்த
முத்தத்தை போல்..

உன்னை ரசித்து கொண்டிருக்கும்
இன்பவேளையில் என்வீட்டின்
ஒருபக்க சுவற்றை மட்டும்
நனைத்து தூறல் போட்டாயே...

3 comments:

அ.முத்து பிரகாஷ் said...

அன்பு தோழர் வாசன் ...

// என்னின் ஓர்கன்னத்தில்
மட்டும் அளித்த
முத்தத்தை போல்.... //

மழைகிட்ட தான் கேட்க முடியாது ...
சுவரின் எல்லா பக்கத்தையும் நனைக்க ...
உங்களவள் கிட்ட கேட்டாலென்ன தவறு ....

ஓ..கேட்டு வாங்கினால்
முத்தம் முத்தம் அல்ல அல்லவா ...

அருமை தோழர் ...
காதல் நிரம்பி வழியும் உங்கள் வார்த்தைகள் ...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள நியோ,

கேட்காமல் கிடைக்கும் முத்தத்தில் தான் சுவை அதிகம் என்று உணர்ந்து இருப்பதை அழகாக சொல்லியுள்ளீர்கள்...

உங்களின் பாராட்டும் உங்கள் மனதைபோல் அருமையாக...

மிக்க நன்றி நண்பா...

S.M.சபீர் said...

அருமையான கற்பனைதோழா உமது ரசனையை நானும் ரசிப்பவனாக உள்ளேன் நன்றி வாழ்த்துக்கள்