Wednesday, May 5, 2010

ஆச்சரியம்... ஆனால்...உண்மை...


ஆயிரம் பேரை கொன்றால்
அரை வைத்தியன் என்றார்கள்
அப்படியிருக்க...
எத்தனையோ பேரை கொல்கின்றாய்
உன் விழியாலும் மொழியாலும்!
உனக்கு டாக்டர் கிடைக்காமல்
போனதேனோ?
ஆச்சரியம்தான்!!!
ஆனால்...
அரசியல்வாதிக்கும் பிறருக்கும்
கிடைப்பதேனோ?
உண்மையில் பல்லாயிரம் பேரை
கொள்கையாலும் வாக்குறுதியாலும்
அவர்கள் கொல்வதனாலா?

(ஆயிரம் வேரை கண்டவன் அரை வைத்தியன் என்பது பழமொழி)

4 comments:

S.M.சபீர் said...

கருத்தாளம் மிக்க கவிதைவரிகள் ரொம்ப அருமையாக உள்ளது நண்பா தொடருங்கள்

Unknown said...

ஹா..அருமையான சிந்தனை தொடருங்கள் வாசன்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சபீர்,

மிக்க நன்றி நண்பா...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள பாலன்,

தொடர்ச்சியான தங்களின் ஊக்கத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள்...