Monday, August 16, 2010

உந்தன் நாதமும் கீதமாய்...


பறையிலிருந்து ஒலிக்கும் ஒசைக்கூட
எந்தன் செவிபறையில் கேட்கவில்லை...

ஆனால்!
உந்தன் குரவலையிலிருந்து தோன்றிய
ஹலோ என்னும் மகிழ்ச்சியான
அறிமுக முதல் இன்சொல்லும...

சந்திப்போம் என்னும் இன்றைய
தொடக்கத்திற்கு கடைசியான மறுசொல்லும்
மெல்லிய நுணுக்கமாய் இருந்தாலும்...
துல்லியமாய் எந்தன் செவிகளில் - உந்தன்
நாதமும் கீதமாய் ஒலித்துக்கொண்டே...

4 comments:

elamthenral said...

அழகு வார்த்தையில் தஞ்சை.வாசன்.. வாழ்த்துக்கள்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள புஷ்பா,

வருகைக்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி...

வைகறை நிலா said...

உங்கள் தேவதையின் குரல் உங்களுக்கு இனிய கீதமாய், சங்கீதமாய்..நாதமாய்..

ம்.ம்...இனிமையாய் தொடரட்டும் கீதமும் கவிதையும்..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள நிலா,

மிக்க நன்றி...

அவள் நாதம், கீதம் என்றால்... உங்களை போன்றவர்களின் பின்னூட்டம் கீதத்தை மெருகேற்றும் இசைக்கருவிகள்...