Tuesday, August 24, 2010

என் உறக்கமும்... நீயும்...

புது இடங்களில் பொதுவாக
தூக்கத்தை இழக்கும்நான்
சில நேரங்களில் அசதியில்
தூக்கத்தில் ஆழ்வதுமுண்டு....


உந்தன் மடிமீது
எந்தன் தலைவைத்து
கலக்கம் ஏதுமின்றி
கண்மூடாத போதும்
உந்தன் பாதம்பட்ட
பூமிமீது தலைசாய்ந்ததாலோ?
என்னையறியாமல் கண்மூடி- மறுநாள்
துயில் எழுகின்றேன்....

0 comments: