Tuesday, October 5, 2010

நீயும் அழகு...

மழையாய் நின்றபின்னும் ரசிக்க
மண்ணில் விழும் தூறல் அழகு...

காற்றாய் கடந்தபின்னும் மேனிக்கு
இதம் அளிக்கும் தென்றல் அழகு...

இசையாய் முடிந்தபின்னும் ராகமாய்
செவியில் ஒலிக்கும் பாடல் அழகு...

எத்தனையோ எழுதியபின்னும் எண்ணத்தை
வார்த்தையில் கோர்க்கும் தேடல் அழகு...

என்னை பிரிந்தபின்னும் உயிராய்
மனதில் நிலைத்திருக்கும் நீயும் அழகு...

8 comments:

Anonymous said...

வார்த்தையில் கோர்க்கும் தேடல் அழகு...
nice
என்னை பிரிந்தபின்னும் உயிராய்
மனதில் நிலைத்திருக்கும் நீயும் அழகு

kaakkaikku than kunjum pon kunji..

VELU.G said...

அழகு மிக அழகு

கவிதை அழகு

சிந்தையின் சிதறல்கள் said...

உங்கள் கவிதையும் அழகு

Unknown said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்கள் அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில்
ஜீஜிக்ஸ் அதிகம் பார்க்கப்பட்ட சமுதாய, பொழுதுபோக்கு நோக்கோடு எழுதும்
தலை சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்து வாரம் 500 பரிசும் தருகிறார்கள் .உங்களுடைய சக ப்ளாகர்ஸ் நிறைய பேர் பரிசும் பெற்றிருகிரார்கள் .(இயற்கை விவசாயம், பிளாஸ்டிக் கழிவுகள், அரசியல் எதிர்பார்ப்புகள், மரம் வளர்ப்பு, சுகாதாரம், மழை நீர் சேமிப்பு , மக்கள் விடுதலை, சமுதாய குறைபாடுகள், சத்தான உணவுகள், உடல் நலம், மருத்துவம், கணினி, தொழில்

வளர்ச்சி, பங்கு சந்தை, கோபம் குறைக்கும் வழிகள், குடும்பத்தில் அன்பு பாராட்டும் செயல்கள், அன்பு புரிதல்கள், பிள்ளை வளர்ப்புகள் , கல்வி) இதில் எதை பற்றி வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாம்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள Anonymous,

மிக்க நன்றி...

தான் ஆடாவிடினும் தன் தசை ஆடும் என்ற பழமொழியின் கருத்தை போல் உங்களின் இனிய பின்னூட்டம்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள வேலு,

தங்களின் பின்னூட்டமும் முத்தழகு...

மிக்க நன்றி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ஹாசிம்,

தங்களை போன்றே என்னவோ? என் கவிதை... அல்லது... தங்களை போன்றே அழகிய பின்னூட்டமோ?

மிக்க நன்றி தோழரே...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சுவேதா,


மிக்க மகிழ்ச்சி...

தாங்கள் அளித்திருக்கும் செய்திக்கும் மிக்க நன்றி...