Tuesday, October 19, 2010

இன்பம் - அவளும்... கனவும்...

காற்றும் நீரும்
ஒன்றாய் இணைந்த
சூழலே இன்பமாய்...

என்றும் இல்லாமல்
இன்று அருகினில்
அவளிருந்தது இன்பமாய்...

இருசக்கர வாகனத்தில்
அவன்பின்னால் இவள்
அமர்ந்ததும் இன்பமாய்...

வீசும் எதிர்காற்றில்
நில்லாமல் இவன்கேசம்
பறந்ததும் இன்பமாய்...

பறந்துமூடிடாத கழுத்துபரப்பில்
செவிமடலின்கீழ் மெலிதாய்அவள்
இதழ்களைக்கொண்டு மூடியதும்
(வாழ்கை)பயணத்தில் இன்பமாய்...

கண்திறந்து பார்த்தசமயம்
கனவாய் இருப்பினும் - தூ(து)க்கத்திலும்
இவனுக்கு பேரின்பமாய் ....

2 comments:

எஸ்.கே said...

சூப்பர்! //கண்திறந்து பார்த்தசமயம்
கனவாய் இருப்பினும் - தூ(து)க்கத்திலும்
இவனுக்கு பேரின்பமாய் .... // அருமை!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சுரேஷ்,

மிக்க நன்றி தோழரே... தங்களின் இனிய ரசிப்பிற்கு, வாசிப்பிற்கு மற்றும் பின்னூட்டத்திற்கு..