Wednesday, October 27, 2010

நிலாவின் இந்திய உலா....


வானத்தில் உலாவரும் நிலா எந்தன் காதலி
மண்ணில் பிறந்திட்ட இந்தநிலா எந்தன் சகோதரி...
என் வாழ்நாளில்...

பலபேருக்கு நீங்கள் உடன்பிறவா சகோதரிதான்
எனக்கோ நீங்கள் உடன்பிறந்த சகோதரியாய்
என் உள்ளுணர்வில்...

என்றும் மங்காத மறையாத பெளர்ணமியாய்
சந்தித்து கலந்துரையாடி மகிழ்ந்த இருமுறையும் 
என் வாழ்வில்....

முழுநிலவினை காணாது பிறையை ரசித்தநாட்களாய்
இணையத்தின் வழியும் அலைபேசி வழியும்
என்னோடு பேசியநாட்கள்...

இந்தியாவையும் எங்களையும் விட்டுபறந்து புகழோடு
வானளவு உயர்ந்து லண்டன் பிரிந்துசென்றதும் - அமாவாசையாய்
என்மனது இன்று...

4 comments:

மதுரை சரவணன் said...

sakothariyin pirvu ammaavasai ... natpu paaraattum ungkal kavithaikku vaalththukkal .

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சரவணன்,

மிக்க நன்றி தோழரே...

உறவுகளின் பரிவிற்கு ஏங்கும் நெஞ்சம், அதன் பிரிவை தாங்க முடியாமல் போகின்றது...

Anonymous said...

nalla anpin velippaadu

nichayam sakothari makizhvarkal

pon..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள பொன்,

மிக்க நன்றி...

சகோதரியின் மனத்தின் அன்பைக்காட்டிலும்... தங்களின் அன்பில் நான் மனம் மகிழ்கிறேன்...