Tuesday, November 30, 2010

நான் உந்தன் பாவையடா...



நானிருப்பதோ காற்றும் ஒலியும்
புகாத கண்ணாடி கூண்டு...
அப்படியே இல்லாமல் போனாலும்
என்னருகில் நீயில்லாமல் போனால்
எந்தன் வாழ்வோ உயிரில்லாமல் - இதுபோல்
வாழும் வெறும் கூடுதான்....

சுவாசம் இல்லாமல் நான்
உயிர்வாழ்கிறேன் அதிசயமாய் என்றால்
காரணம்? நீதான் எனச்சொல்வேன்.
நான் ஆடிவீசும் காற்றில்
மலர்ந்த மலர்களின் வாசமும்
நான் அழைக்கும் கீதமும்
மெல்ல உன்னை வந்தடையும்
அதன்வழியே இந்தமங்கையின் மனதும்
உனைச்சேரும் நீயும் என்னை - காலத்தோடு
வந்தடைவாய் என்ற நம்பிக்கையில்தான்...

ஒற்றைக்காலில் தவம்செய்து இறைவனிடம்
வேண்டிய வரமடையும் முனிவன்போல்
எனைச்சேரும் வரைஉனக்காக நானும் - காத்திருப்பேன்
அனுதினம் ஓயாமல் உன்நினைவில்.

மையத்தில் கால்பதித்து சுழலும்
விசைக்கொடுத்த பொம்மையல்ல நான்
மையல்கொண்ட என்மனமறிந்து வருவாயென்ற - மெய்யான
உணர்வோடு சுற்றிக்கொண்டு நில்லாமல்...

ஒற்றைகையில் எந்தன் உடலின் மானம்
காக்கும் ஆடையை ஏந்திக்கொண்டு
மற்றொருகையோ? உயிர் கொடுக்க என்னுயிரை - ஏந்திவரும்
உன்னை ஏந்திட துடித்துக்கொண்டு...

வெண்ணிலவின் ஒளியில் மிளிரும் பாவையாக
வெண்ணிலவாக உனக்கு ஒளிரும் பாவையாக
வெண்ணிற ஆடைப்பூண்டு மயக்கும் பாவை - இன்றுநான்
வெண்ணிற மின்னொளியில் இயங்கிக்கொண்டு..

கல்லுக்குள் தேரையை படைத்து காப்பவன்
என்மனதுக்குள் இருக்கும் உன்னையும் படைத்திருப்பான்
உன்கண்ணுக்குள் இருக்கும் என்னை காப்பதற்கு - உனைநோக்கி
சொல்லுக்குள் உயிரைவைத்தும் காத்துக்கொண்டு.

7 comments:

KANA VARO said...

காதல் இப்படியெல்லாம் படுத்துமா? நல்ல கவிதை.

Anonymous said...

அட.. தஞ்சை வாசனோட பதிவா இது??
நாலு வரியைத் தாண்ட மாட்டாரே.. எப்படி இத்தனை வரிகளை எழுதினார் என்று மீண்டும் மீண்டும் சந்தேகம் எழுகிறது நண்பரே..
ஆனாலும் கவிதை நன்றாக உள்ளது.
வாழ்த்துக்கள்.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள KANA VARO,

காதலில் விழும் பெண் தன்னையும் சிறை வைத்து, மற்றவர்களையும் சிறை வைத்து விடுவார்கள்...

காதல் பண்ணும் வேலைகள் பற்பல...

மிக்க நன்றி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இந்திரா,

நாலு வரிக்கு மேல எழுதினா படிக்க உங்களுக்கு கடினமா இருக்குமேனு எழுதினா. இப்படியெல்லாமா கேலி பண்ணுறது.... இனி இருங்க நிறைய எழுதி உங்களை போதும் போதும் என்று செய்து விடுகிறேன்... அப்படினு சொல்வேன்... ஆனா மாட்டேன்... பயப்படவேண்டாம்...

சந்தேகம் வேண்டாம் எழுதினது நான் தான்.... இது ஒருவர் அளித்த படம் அதுக்கு நான் எழுதியது...நீங்களும் ஒரு படம் கொடுங்க என்னால் முடிந்ததை எழுதுகிறேன்...

மிக்க நன்றி...

Anonymous said...

ovvoru varikalum ithaiyaththai thulaiyidukirathu...pon

Anonymous said...

ovvoru varikalum ithaiyaththai thulaiyidukirathu...pon

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள பொன்,

மிக்க நன்றி..

ஒவ்வொரு வரிகளை ரசித்து பார்த்து படித்து பாராட்டியமைக்கு மிக்க மகிழ்ச்சி...