Wednesday, March 23, 2011

இறைவன் கொடியவன்... (2)

ஒவ்வொரு வேளையும் உண்ணும்போது
உன்னை நினைத்துக்கொண்டே உண்கிறேன்
பலநேரங்களில் உண்ணாமல் போகிறேன்...

சிலநாட்கள் உட்கொள்ளும்போது வயிற்றுக்கும்
வாய்க்கும் இடையே தொண்டையில்
உணவுசிக்கி திக்குமுக்காடி போகிறேன்...

ஆனால்!
ஒருமுறைகூட அப்படியே நெஞ்சமடைந்து
உன்நினைவோடு இறந்து போகவிடாமல் - என்னை
வாழவைக்கும் இறைவன் கொடியவனே!

5 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அப்ப முத்திப் போச்சின்னு நினைக்கிறேன்...

சென்னை பித்தன் said...

இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தவன் அவன்தானே! நினைவகளோடு வாழ்வதே அவன் விதித்ததுதானே!

Pranavam Ravikumar said...

Well written. Keep the faith. My wishes.

arasan said...

அண்ணே ஏதோ நடக்குது ...
என்ன விஷயம் கூறுங்கள் அண்ணே ...

தமிழ்த்தோட்டம் said...

ஏன் இப்படி.. என்னாச்சு?