Monday, March 14, 2011

நெற்றிப்பொட்டில் உன்னை வைக்கிறாய்...


நெற்றியில் என்னுடைய
எந்த விரலால்
பொட்டு இட்டுக்கொண்டால்
அழகுபெற செய்யுமென்பதும்
ஆயுளை நீட்டுமென்கிற
சாஸ்திரம் தெரியாது...

ஒருவேளை!!!
உன்னை நினைத்து
எப்படி வைத்தாலும்
அழகாய்தான் தெரியும்...
உன்னையே நினைத்துக்கொண்டு
இருக்க என்னாயுளும்கூடும்...

ஆனாலும்!
நீயெந்த விரல்களால்
எனக்கிட்டாலும் அழகுதான்..
அதனை நினைக்கநினைக்க
என்னாயுளும் அதிகம்தான்...
என்பதுமட்டும் என்நம்பிக்கை..

13 comments:

Anonymous said...

mudhalil podhu paarvai piragu
avalin paarvaai piragu
aval paarvayil avan

Pranavam Ravikumar said...

A differnt thought, well expressed. The success lies in how well you interpret a thought different from others. In that perspective, you done a great job! My wishes.

MANO நாஞ்சில் மனோ said...

//உன்னையே நினைத்துக்கொண்டு
இருக்க என்னாயுளும்கூடும்...//

அருமை அருமை....

MANO நாஞ்சில் மனோ said...

//அதனை நினைக்கநினைக்க
என்னாயுளும் அதிகம்தான்...
என்பதுமட்டும் என்நம்பிக்கை..///

கலக்கல் கவிதை....

கமலேஷ் said...

வாசன் எப்படி இருக்கீங்க..
கவிதை ரொம்ப நல்லா இருக்கு..
நெற்றியில் பொட்டுக்கு பதிலாய்
இந்த வரிகளையே vaitthidal போல...

Anonymous said...

//நெற்றியில் என்னுடைய
எந்த விரலால்
பொட்டு இட்டுக்கொண்டால்
அழகுபெற செய்யுமென்பதும்
ஆயுளை நீட்டுமென்கிற
சாஸ்திரம் தெரியாது...//

இந்தக் கணக்கெல்லாம் இருக்கா???
புதுசா இருக்கே..

Anonymous said...

//ஒருவேளை!!!
உன்னை நினைத்து
எப்படி வைத்தாலும்
அழகாய்தான் தெரியும்...
உன்னையே நினைத்துக்கொண்டு
இருக்க என்னாயுளும்கூடும்...//

இத்துனூண்டு பொட்டுல எவ்ளோ விசயம் இருக்கு பாருங்களேன்..
பயபுள்ள என்னமா யோசிச்சிருக்கு..

Anonymous said...

//நீயெந்த விரல்களால்
எனக்கிட்டாலும் அழகுதான்..
அதனை நினைக்கநினைக்க
என்னாயுளும் அதிகம்தான்...
என்பதுமட்டும் என்நம்பிக்கை..//

இப்ப பொட்டு வச்சாங்களா இல்லையா???
அது அழகா இருந்துச்சா இல்லையா?
அவங்க நம்பர் குடுங்க.. நாங்களே கேக்குறோம்.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள மனோ,

மிக்க நன்றி...

இரண்டு மறுமொழிகளை இட்டு என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டீர்கள்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள கமலேஷ்,

மிக்க நன்றி நண்பா...

நான் நலம். நீங்க எப்படி இருக்கீங்க... உங்களுடன் பேசி ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது... தங்களின் வலைப்பக்கம் வந்து பலநாட்கள் ஏமாற்றம் அடைந்தது உண்டு...

உங்க பின்னூட்டம் பார்க்கும் போது அத்தனை மகிழ்ச்சி.... அடிக்கடி இல்லாவிடினும் எப்பொழுதாவது வந்துட்டு போங்க....

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இந்திரா,


மிக்க நன்றி...

// இந்தக் கணக்கெல்லாம் இருக்கா???
புதுசா இருக்கே..//

இந்த கணக்கு உங்களுக்கு எளிது தான் பாஸ் மார்க் வாங்கிவிடுவீங்க...


// இத்துனூண்டு பொட்டுல எவ்ளோ விசயம் இருக்கு பாருங்களேன்..
பயபுள்ள என்னமா யோசிச்சிருக்கு..//

இன்னும் இருக்கு...


எல்லாம் உங்கள் நட்பின் அடையாளம்...

// இப்ப பொட்டு வச்சாங்களா இல்லையா???
அது அழகா இருந்துச்சா இல்லையா?
அவங்க நம்பர் குடுங்க.. நாங்களே கேக்குறோம்.//

பொட்டு வைத்து விட்டார்கள் அதுக்குதான் இந்த பில்டப்பு....

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ரவி,

மிக்க நன்றி...

தங்களின் பின்னூட்டம் மனதிற்கு பல்வேறு ஊக்கங்களை அளிக்கிறது நான் பல ஆக்கங்களை படைத்திட... மிக்க மகிழ்ச்சி....

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள Anonymous,

மிக்க நன்றி...

மூன்று பத்திகளையும் அழகாக பிரித்து என் மனத்தின் ஆழத்தை அற்புதமாக காட்டியுள்ளீர்கள்...

வாழ்க உங்கள் சிந்தனை...

தம்பியின் உள்ளம் தாங்கள் அறிந்ததே...