Thursday, March 17, 2011

இயற்கையை வெல்லும் உந்தன் அன்பு...


காலையில்!
கீழ்வானம்கூட கதிரவனிடம் கதிர்களை
கடன்வாங்கியே என்னைவந்து எழுப்பும்
உன்மனம் சொல்லும் வார்த்தைகளோ
அதற்குமுன்னே என்னைகவிதையாய் கண்அசைக்கும்...

மாலையில்!!
அந்திவானம்கூட வானவில்லிடம் நிறத்தை
கேட்டேதன்னை அழகுபடுத்தி என்னிடம்காட்டும்
உன்னுள்ளம் கொண்டிருக்கும் நிகரற்றஅன்போ
அவற்றைவிட என்னைபன்மடங்காய் கவர்ந்திழுக்கும்..

இரவினில்!!!
நீலவானம்கூட வெண்மதியிடம் ஒளியை
நீந்தசொல்லியே என்கண்களை தீண்டிச்செல்லும்
உன்னிதயம் பாடும் எனக்கானவரிகளோ
அதனைவிட என்னைமெதுவாய் தாலாட்டிவெல்லும்...





காலை எழுந்ததும் என்கண்கள் முதலில்
தேடிபடிப்பது உந்தன் குறுஞ்செய்தியே...
தூக்கம் வருகையில் கண்பார்க்கும் காட்சிக்குள்
இருப்பதும் உந்தன் குறுஞ்செய்தியே...

இன்று என்னுடன்
இல்லாமல் போனாலும்
பேசிடும் மெளனவார்த்தைகளாய் - எனக்குள்
உணர்த்திக்கொண்டே உன்அன்பினை...

4 comments:

சமுத்ரா said...

good one sir..

Pranavam Ravikumar said...

அருமை..வாழ்த்துக்கள்!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புடன் சழுத்ரா,

மிக்க நன்றி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ரவி,

மிக்க நன்றி...