Friday, March 18, 2011

நீயும்... நானும்...


எண்ணங்களை வார்த்தைகளாக
அனுப்பிடும் விளையாட்டில்
சிலநேரங்களில் மெளனங்கள் - நமக்குள்
அழகாய் பூக்கின்றது....

மெளனபூவை சூடியிருக்கும்
உன்முகத்தின் அழகினை
நான் பக்கத்திலிருந்து - இமைமூடாமல்
ரசிக்க வழியில்லாமலும்...

ஒருபுறம்
எண்ணங்களில் வரைமுறை
தாண்டுகின்றேனோ என்றெச்சமும்...
மறுபுறம்
எண்ணங்களுக்கு என்னசொல்வதென்று - தெரியாமல்
நீயோயென சிந்தித்துக்கொண்டும்.

2 comments:

Anonymous said...

very excellant one!vazhthukkal!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

மிக்க நன்றி அக்கா...