Monday, November 14, 2011

உன்னை நினைப்பதுமட்டும்...

 
உடலெல்லாம் சுட்டும் கொள்(ல்)கிறேன்
சுட்ட இடமெல்லாம் புண்ணாகி
வடுக்கள் மட்டுமே நிறைந்திருக்கிறது
உன்னை நினைப்பதுமட்டும் குறையவில்லை

பசித்தும் பட்டினியாய் கிடக்கிறேன்
சாப்பிடாமல் குடலெல்லாம் அரித்து
வயிறு மட்டுமே வலிக்கிறது
உன்னை நினைப்பதுமட்டும் சலிக்கவில்லை

உன்னைமறக்க மதுவை குடிக்கிறேன்
குடித்துவிட்டு வாந்தியும் எடுக்கிறேன்
இரத்தம் வருவதுகூட நின்றுபோகிறது
உன்னை நினைப்பதுமட்டும் நிற்கவில்லை...

போதை பொருளையும் எடுக்கிறேன்
எங்கோ ஆகாயத்தில் பறக்கிறேன்
மயக்கத்தில் என்னைகூட மறந்துபோகிறது
உன்னை நினைப்பதுமட்டும் மறக்கவில்லை...

பார்வை பார்ப்பதுயாவும் நீயாகிறாய்
கண்ணை பிய்த்துஎறிய நினைக்கிறேன்
உள்ளமும் உணர்வுமாய் என்னுள் - உயிராகினாய் 
அதைமட்டும் விடமுடியாமல் தவிக்கிறேன்....

5 comments:

arasan said...

உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு அண்ணே ..
கவிதை சொல்லவே வேண்டாம் ..
அட்டகாசம்...

இராஜராஜேஸ்வரி said...

உன்னை நினைப்பதுமட்டும் மறக்கவில்லை.../

மறக்கமுடியாத அருமையான கவிதை!

இராஜராஜேஸ்வரி said...

இனிய மழலையர் தின வாழ்த்துகள்..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள அரசன்,

மிக்க நன்றி தம்பி...

எதை நேர்மையென்று சொல்லுறீங்க?

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இராஜராஜேஸ்வரி,

மிக்க நன்றி...

தங்களின் நீண்ட நாளுக்கு பிறகான வருகைக்கும் மற்றும் மழலையர் தின வாழ்த்துக்கும்....