Monday, August 23, 2010

திருமணநாள் நல்வாழ்த்துகள்

இல்லறம் என்னும் நல்லறத்தில் 20.08.10 அன்று இணைந்த என் உடன்பிறவா சகோதரனும், அன்பு நண்பனுமாகிய தஞ்சை.முரளி என்னும் முரளிதருக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்....


விதைகள் விருச்சமாவது இயற்கை!
விவாகமென்பது இருமனங்களின் சேர்க்கை!!
வாழ்கை என்னும் மரத்திற்கு
விதையாய் இன்று ஓர்தொடக்கம்!!!

கோடையும் குளிரும் கலந்து
வருவது இயற்கை!
ஊடலும் கூடலும் பிணைந்து
வருவது வாழ்க்கை!!

மழைப்போல் வரட்டும் சுகம்
கு(உ)டையாய் ஒருவருக்கொருவர்
இருந்திடுவீர் அனுதினமுமே...
வெயில்போல் வரட்டும் சோகம்
பனியாவியாய் மறையட்டும்
இருந்தால் அக்கணமே...

மரங்களை வெட்டி நமக்காக
வீடுகளை கட்டிக்கொண்டோம்!
மரங்களுக்காக காடுகளை கூட
நாம் விட்டுவைப்பதில்லை!!

ஆனால், நீவிர்!
ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து
ஒருவரையொருவர் புரிந்துக்கொண்டு
ஒன்றாய் பல்லாண்டுகாலங்கள்
முத்தமிழாய் சிறந்துவாழ்ந்திட
இறைவனை வேண்டுகின்றேன்...

4 comments:

தோழி said...

நீவிர்!
ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து
ஒருவரையொருவர் புரிந்துக்கொண்டு
ஒன்றாய் பல்லாண்டுகாலங்கள்
முத்தமிழாய் சிறந்துவாழ்ந்திட
இறைவனை வேண்டுகின்றேன்... //

வாசன், உங்களுடன் இணைந்து நாங்களும் இறைவனை வேண்டுகிறோம்...

ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரோடி
மூங்கில் போல் சுற்றம் முடிவில்லாமல் வாழ்க..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள தோழி,

என்னுடன் சேர்ந்து இறைவனிடம் வாழ்த்தி அருள வேண்டிய தங்கள் அன்பான இதயத்திற்கு என் சார்பிலும் நண்பன் சார்பிலும் மிக்க நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்...

தஞ்சை-முரளி said...

வாழ்த்து மழைக்கு எனது அன்பு கலந்த நன்றி அண்ணா..........

வாழ்திய தோழி அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.......

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள முரளி,

நன்றிக்கு, நன்றி தம்பி...