Tuesday, August 24, 2010

கனியும் நீயே... விதையும் நீயே...

பெண்ணே!
கனிக்குள் இருக்கும் விதையை
கணித்து எண்ணிவிட முடியும்
ஆனால்!
விதைக்குள் இருக்கும் கனியை
எண்ண முடியாது என்பார்கள்...
அப்படித்தான்!!!
உன்நினைவால் நான்வடிக்கும் கவிதையை
விரல்விட்டு எண்ணிவிட முடியும்
ஆனால்!
கவிதையை வடிக்கதூண்டும் உன்நினைவை
எதனாலும் கணிக்க முடியாது...

4 comments:

அண்ணாமலை..!! said...

மிக அருமையான கற்பனை வாசன்!
எங்கே பிடித்தீர்கள் இந்த கான்செப்டை!
ரொம்ப நல்லாயிருக்கு!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள அண்ணாமலை,

மிக்க நன்றி தங்களின் என்றும் தொடரும் பின்னூட்டத்திற்கு...

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் என்றோ கேட்டது கனி பற்றிய இந்த செய்தி.

இன்று அதை என் கவிதைக்காக கையாட்டேன்...

ksilamathy@gmail.com said...

vidhaikkul irukkum kaniai enna mudiyaadhu enbadhu superana sindhanai aahaa,,, arumai

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இளமதி,

மிக்க நன்றி... தங்களின் வரவிற்கும் வாழ்த்திய பின்னூட்டத்திற்கும்..

என்றும் உங்கள் வரவை இனி இவன் எதிர்பார்த்துக்கொண்டு...