Sunday, August 29, 2010

சந்திப்பும்.... சிந்திப்பும்


முதல்முறையாய் ஒருமுறை
சந்தித்ததற்கே இப்படியா?
என்றாய்
அதனால் என்னவோ?
இரண்டாம்முறை சந்திக்க
சிந்திக்கின்றேன்
வர்ணித்ததில் பயமில்லை
வார்த்தைகளுக்குதான் பஞ்சம்
என்னுள்….
இரண்டாம்முறை சந்தித்தபின்
வர்ணிக்க வார்த்தையற்றுபோவேனோ?
எனநினைத்து….

2 comments:

Aathira mullai said...

சந்தித்ததால் சிந்திப்பதும் சிந்தித்ததால் சந்திக்க மறுப்பதும்..
எண்ணச்சிதறல்களின் முரண்பாடுகளோ வாசன்...

ஒரு சந்திப்பில் இத்துனை சிந்தனைக் கொடிகள் படரும் போது வார்த்தை மலர்கள் மலராது போகுமோ...
ஏனிந்த தயக்கம் மீண்டும் சந்திக்க..
சிந்திக்க..

தமிழ்ச்சோலையில் கவிமலர்கள் மணம் வீசவாவது மீண்டும் சந்திக்க வேண்டும்..அவரை..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ஆதிரா,

சந்திக்க இயலாமல் போனாலும், சிந்திக்க மறக்காமல் போகின்றது...

என்றைக்கும் உடன்பாட்டை மட்டும் மனதில் கொண்டு வாழ்கின்றேன்...

தங்களின் வரிகளுக்கும் எந்தன் உடன்பாடே எப்பொழுதும்... அதில் முரண்பாடே கிடையாது...

பல எதிர்பார்ப்புகளோடு சந்திக்கும் ஆவலோடு ஒருமுறையல்ல... எத்தனைமுறை சந்திக்கவும்... என்றென்றும்... இவன்...

மிக்க நன்றி... சிந்தனைகளை மலர செய்கின்ற வரிகளுக்கு...