Tuesday, March 15, 2011

வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு...


நான் உன்னை நேசிப்பதால்
நீயென்னை வாசிக்க ஆசையென்று
ஆசையுடன் அன்றெழுதிய விரல்கள்
இன்று ஏனோ தடுமாறுகிறதடி...

தந்தி அறுந்துபோன வீணையோ
த(சு)ரம் குறைந்துபோன வீணையோ
நீயென்னை மீட்காமல் போகின்றாய்?
உன்னால் நான்வெறும் மரமாகிபோகிறேன்...

உன்உள்ளத்தின் சோகங்களை
மறந்து தினம்தினம்
நீயென்னை மீட்டியநாட்களும்
என்னுள் இன்றுகனவாய்...

உன்எண்ணத்தை உள்வாங்கி
இனிமையான ராகங்களை
நாதமாய் வழங்கிநான்
வாழ்ந்திடவே விரும்பிகொண்டு...

உன்னுடன் இருக்குமென்னை
நித்தம் நித்தம்
தீண்டாமல் நீபோனாலும்
பரவாயில்லை...
திரும்பிக்கூட பார்க்க
மனமில்லாமல் போனதேனோ?

அன்புடனும் ஆர்வத்துடனும்
என்னை அனுகியநீ
இன்று வீட்டினோரத்தில்
கிடைத்திய பொருளாய்
ஆக்கியதேனோ? நான்
செய்த்திட்ட பிழையேதோ?

உன்னை அழச்செய்யும்
கவலைகளை நான்துடைத்து
உலகில் அழகுபெற
செய்திடவே நான்துடிக்கிறேன்...

நீ அழுவதை
நான் காட்டிடகூடும்
வாசிக்கும் பாட்டினில்....
நான் அழுவதை
யார் அறியக்கூடும்
நீயேயறியாமல் போனால்...

பாரதியின் வரிகளோ
நான் உனக்கு!!!
அன்று!
வீணையடி நானுனக்கு
மேவும்விரல் நீயனக்கு...
இன்று!
நல்லதொரு வீணைசெய்தே
நலங்கெட புழுதியில் எறிகிறாயே!!!

10 comments:

Pranavam Ravikumar said...

அருமை!

எஸ்.கே said...

தங்கள் வலைப்பூவை லைச்சரத்தில் அறிமுகப்படுத்தி பயனடைந்தேன். மிக்க நன்றி!
http://blogintamil.blogspot.com/2011/03/blog-post_6398.html

arasan said...

அண்ணே மிக தங்கள் படைப்புகளில் மிகவும் ரசித்த கவிதைகளில்
இதுவும் ஒன்று...
அற்புதமாய் எழுதி இருக்கீங்க ....

CS. Mohan Kumar said...

வலைச்சரம் மூலம் அறிந்தேன் வாழ்த்துகள்

உங்களுக்கு தஞ்சாவூரா? எனக்கும் தான். தஞ்சாவூர் பற்றிய இந்த பதிவை முடியும் போது வாசியுங்கள்

தஞ்சையின் மறக்க முடியாத இடங்கள்

http://veeduthirumbal.blogspot.com/2010/07/blog-post_20.html

Anonymous said...

கவிதை நல்லாயிருக்கு.. படம் வச்சிருந்தா இன்னும் நல்லாயிருக்கும்ல..


அப்புறம் உங்க கவிதைலயே இந்த வரி எனக்கு ரொம்ம்ம்ம்ப பிடிச்சிருந்தது..

//வீணையடி நானுனக்கு
மேவும்விரல் நீயனக்கு...
இன்று!
நல்லதொரு வீணைசெய்தே
நலங்கெட புழுதியில் எறிகிறாயே!!!//


ஹிஹிஹி

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ரவி,

மிக்க நன்றி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சுரேஷ்,

மிக்க நன்றி நண்பரே...

தங்களின் இனிய் வரவிற்கு என்னை உலகிற்கு அறிமுகபடுத்தி பெருமை படுத்தியமைக்கும்... மிக்க மகிழ்ச்சி...

பார்த்தேன்... மகிழ்ந்தேன்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள அரசன்,

மிக்க நன்றி....

உங்கள் இதயத்தை ரசிக்கும்படி எழுதியதில் மிக்க மகிழ்ச்சி எனக்கு...

இது இதயவீணை பாடும் சுக ராகம்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள மோகன்,

மிக்க நன்றி...

தங்களின் நட்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி...

நானும் தஞ்சாவூர் தான்...

கண்டிப்பாக வருகிறேன்.. எழுதுகிறேன்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இந்திரா,

மிக்க நன்றி...

// கவிதை நல்லாயிருக்கு.. படம் வச்சிருந்தா இன்னும் நல்லாயிருக்கும்ல..//

படம் போட்டாச்சு....


// அப்புறம் உங்க கவிதைலயே இந்த வரி எனக்கு ரொம்ம்ம்ம்ப பிடிச்சிருந்தது..

//வீணையடி நானுனக்கு
மேவும்விரல் நீயனக்கு...
இன்று!
நல்லதொரு வீணைசெய்தே
நலங்கெட புழுதியில் எறிகிறாயே!!!//


ஹிஹிஹி//

ரொம்ப சந்தோஷம்... தூக்கி வீசிபுட்டு இதுல சிரிப்பு வேற...

இருக்கட்டும்... இருக்கட்டும்....