Saturday, July 10, 2010

நீ தேனீயா?


தேனீயால் வாழ்நாளில் ஒருமுறை
மட்டும்தான் கொட்ட இயலும்.
ஆனால்,
நீயோ! என்னை உன்பார்வையாலும்
நினைவாலும் தேனீயை போல் - எக்கணமும்
கொட்டி கொன்று கொண்டே...
ஆனால்,
வலியும் தேனாய் என்மனதுக்குள்....

2 comments:

S.M.சபீர் said...

வலியையும் தேனாக்கும் எனதருமை நண்பனின் கவிதை அருமை

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சபீர்,

வலிகளுக்கு தேனாய் வழிதரும் நண்பர்கள் நீங்கள் இருக்க அப்படியாவது விந்தையல்லவே...