Thursday, July 1, 2010

எதற்காக?

என் உயிரையும் உதிரத்தையும்
நித்தம் நீ குடித்துக்கொண்டு...
உன்னுடன் தேன்நிலவாய் தேனீர்
மட்டும் அருந்தி மகிழ்ந்தேன் என்றா? - இல்லை
உன் உதட்டின் வடிவத்தையும்
வடிவையும் ரசித்து அதில் வடியும்
தேனையும் பருகிட நினைத்தேன் என்றா? - இல்லை
உன் நாழிகையின் மேல் சுரந்து
நீ உமிழும் உமிழ்நீரையும் அமிர்தமாய்
பரிமாறி சுவைத்திட எண்ணியதற்கா?
என் உயிரையும் உதிரத்தையும்
நித்தம் நீ குடித்துக்கொண்டு...

4 comments:

சிந்தையின் சிதறல்கள் said...

உணர்ச்சி pooர்வமான வரிகள்

S.M.சபீர் said...

உணர்ச்சி வசத்தோடு எழுதப்பட்ட அனுவக்கவிதை ப்ரமாதம்.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ஹாசிம்,

மிக்க மகிழ்ச்சி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சபீர்,

உணர்ச்சி வசனமாய் இங்கே...

மிக்க மகிழ்ச்சி நண்பா...