Saturday, July 24, 2010

காதலன் கைகள்...

ஆறுதல்சொல்லி கண்ணீர்
துடைத்திட ஆயிரம்கைகள்
உன்னருகில் இருந்தாலும்...
உயிர்க்கொண்டு முந்திவரும்
சிலகோடி உயிரணுவில்
ஒன்றுமட்டும் கருப்பை
அடைந்து கருவாய்
உயிர்பெறும் செயலாய்
அவனின் கைகளை - மட்டுமே
நினைத்து இருப்பதேனோ?

6 comments:

elamthenral said...

உங்களின் கவிதை மனதை தொடுபவனவாய் உள்ளது தஞ்சை.வாசன் சார்... வாழ்த்துக்கள்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள புஷ்பா,

இக்கவிதை கூட உங்களின் மனது எனச்சொல்லலாம்....

மிக்க நன்றி...

Aathira mullai said...

கவிக்கருவும் உயிர்க்கருவும் வீரிய விந்தணுவின் வேகச்செயலால் விளைந்த சுகப்பிரசவம் போல் ஜொலிக்கிறது.. அருமை..பாராட்டுக்கள்..

Anonymous said...

//சிலகோடி உயிரணுவில்
ஒன்றுமட்டும் கருப்பை
அடைந்து கருவாய்
உயிர்பெறும் செயலாய்
அவனின் கைகளை - மட்டுமே
நினைத்து இருப்பதேனோ?//

உணர்வுகளின் பிரதிபலிப்பை அற்புதமாக சொல்லியிருக்குறீர்கள்..

முதல் முறை வருகிறேன்..
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளன..

தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இந்திரா,

மிக்க மகிழ்ச்சி தங்களின் பொன்னான பாதங்களை முதல் முறையாக பதித்து, அன்பாய் பாத சுவடுகளை இங்கே விட்டு சென்றமைக்கு...

தொடர்ந்து தங்களின் பாதம் இங்கே பதிய வேண்டுகின்றேன்...

தங்களின் வரவிற்கும் மற்றும் அழகிய பின்னூட்டத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ஆதிரா,

தங்களின் பாராட்டில் குழந்தையின் முகம்போல் நான் மலருகின்றேன்...

மிக்க நன்றி...