Monday, July 19, 2010

லேசா... லேசா...


மயில்தோகை மெல்லியதென எண்ணினேன்!
மயிலிறகு அதனினும் மெல்லியதென உணர்ந்தேன்!!!

பூக்கள் மென்மையானதென எண்ணினேன்!
பூவிதழ்கள் அதனினும் மென்மையானதென உணர்ந்தேன்!!!

காற்று லேசானதென எண்ணினேன்!
காற்றுதுகள்கள் அதனினும் லேசானதென உணர்ந்தேன்!!!

இவையெல்லாம் என்மனதில் பாரமாய்!
இருகைகளில் உனைதூக்கிய பொழுதினில் எண்ணினேன்!!!

அதனினும் மெல்லியதாய் மென்மையாய்
லேசானதாய் என்மனதை இச்சமயமும் உணர்கின்றேன்.

4 comments:

elamthenral said...

superb...... hats-of to you...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள புஷ்பா,

மிக்க நன்றி...

தலை வணங்குகின்றேன் தங்களின் புகழுக்கு...

Aathira mullai said...

கவி மனம் மென்மையாக இருக்கும் தருவாயில் எல்லாம் மென்மையாகவே காட்சி அளிக்கும். அழகு சொட்டும் கவிதை..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ஆதிரா,

தங்களின் மென்மையான ஆனால் உயர்ந்த பாராட்டிற்கு என் நன்றிகள்...