Monday, March 8, 2010

தேவியும் நீயே... பாவியும் நீயே...



என் மனதில் கொட்டும் அருவியும் நீயே
என் மனதை க(கா)ட்டும் கருவியும் நீயே...

என் மனதில் பறக்கும் குருவியும் நீயே
என் மனதை குடையும் குளவியும் நீயே...

என் மனதில் ஓடும் புரவியும் நீயே
என் மனதை ஒடுக்கும் புல்லுருவியும் நீயே...

என் மனதில் உதிக்கும் கவியும் நீயே
என் மனதை திறக்கும் கள்ளசாவியும் நீயே...

என் மனதில் குடியிருக்கும் தேவியும் நீயே
என் மனதை கொல்லும் பாவியும் நீயே...


ImageBoo Free Web Hosting

4 comments:

வைகறை நிலா said...

உங்களால் நேசிக்கப்படுகின்ற பெண்ணை 'பாவி' என்றெல்லாம் சொல்வீர்களா..? அது மட்டும் கொஞ்சம் நெருடுகிறது...
மற்ற வரிகள் எல்லாம் அழகாக இருக்கிறது..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள நிலா,

அப்படியென்றால்,என்னை நேசிக்காமல் மறந்து போனவளை அழைக்கலாம் அல்லவா?...

வைகறை நிலா said...

உங்களை நேசிக்காமல் மறந்து போயிருக்கலாம்.. ஆனால் உங்களுக்குள் அழகான கவிதைகளை உருவாகச் செய்திருக்கிறார்..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள நிலா,

எனக்கு மட்டும் தராமல் (கவிதையை) அதனை உங்களையும் அடைய செய்தமையால் அவளை தேவியென சொல்லுக்கின்றேன்...

இப்ப மகிழ்ச்சிதானே?