Wednesday, March 17, 2010

இதயம் துடிக்க மறந்த தருணம்...


என் மனதில் புதைந்திருந்த உன்னை
என் கண்ணில் காட்சியாய் கண்ட தருணம்

என் காதலை உன்னிடம் எப்படி
என் பாணியில் சொல்வது என்று எண்ணிய தருணம்

என் காதலை உன்னிடம் சொல்லி
என்ன பதில் கிடைக்கும் என்று நின்றிருந்த தருணம்

உன் இதழின் அசைவை காட்டி
என்னை என்னிடம் இருந்து பிரித்த மெல்லிய தருணம்

உன் அருகிலிலும் உன்னோடும் பழகி
என் அன்பை காதலை உணர்வாய் காட்டிய தருணம்

இப்படி எப்படியோ பல தருணங்களில்
துடிக்க மறந்திட்ட என்னிதயம் இன்றும் சில தருணம்

துடிக்காமல் நின்று மீண்டும் துடிக்கும்
பல்லாண்டுகள் கடந்தாலும் உனை நினைக்கும் தருணத்திலும்...

0 comments: