Tuesday, March 16, 2010

நீயும்... உன் நினைவும்...


காதலியே!
நம்மைநாம் புரிந்திருந்தும்
எத்தனையோ ஆண்டுகள்
காதலித்தும் பயனின்றி
வேரோடு ஆலமரத்தை
சாய்ப்பதுபோல் மறந்துவிடுவோம்
என்றுசொல்லி மறை(ற)ந்துவிட்டாய்.

என் காதலியே!
என்னை விட்டு பிரிந்துவிடாதே
என்றேன் பிரிந்து சென்றாய் - ஆனால்
உன் நினைவுகளை
என்னை விட்டு பிரிந்துவிடு
என்கின்றேன் பிரிய மறுக்கின்றது.
உன்னைவிட உன்னை நினைவுகள்
மேலானவை என்னுள் தினமும்
சுவையையும் சுமையையும் இரட்டிப்பாக
கலந்து எந்நேரமும் என்னுடனே...

0 comments: