Thursday, January 7, 2010

வாழ்வோம் நட்புடன்

என் சோகத்தை
நான் சொல்லாமலே
என்னோடு  பகிர்ந்துகொள்ளும்
நண்பனைத்தான் தேடுகின்றேன் 
உன்னை நினைத்தேன் - இன்று
தவறை உணர்ந்தேன்.

நான் சொல்லாமலே
புரிந்துகொள்ளும் நிலையில்
நீயில்லை என்பதும்
நான் சொல்லியும்
பொருட்படுத்தாதது - என்தவறே
அதுவென்றும் உணர்ந்தேன்.

என்சுமையை உன்மேல் இறக்கவோ
உன்சுகத்தை நான்கெடுக்கவோ
விரும்பமில்லை ஆதலால்
உன்னிடம் சொல்லவுமில்லை
சொல்லகூடாது என்றுமில்லை - அதனால்தான்
என்னையும்மீறி உளறிவிட்டேன்.

என்னைப்பற்றி எதுவேண்டுமானாலும்
நீ நினைக்கெல்லாம், சொல்லலாம்
அதைப்பற்றி கவலைகள்
எனக்கில்லை என்றும்
மனநலம் குன்றியவனென்றோ - நான்
பாதிக்கபட்டவென்றோ புறங்கூறலாம்.

நாம்செய்யும் தவற்றைமறைக்க
அடுத்தவரை குறைகூறுவது
மனிதவாழ்கையில் இயல்பானது அதனால்
உன்னையிங்கு உவமையாக்கி
என்னையிங்கு உருவகபடுத்தி - நம்நட்பை
இழிவாய் எடுத்துகாட்ட விருப்பமில்லை.

வாழ்வோம் நட்புடன் 
வளர்வோம் ஒருமனதுடன்.

0 comments: