Wednesday, January 27, 2010

பாவை நீயும் பூவோ?


நீ விரும்பும்
நான் வாங்கிதந்த
மல்லிகை மலருந்தன்
கூந்தலின் சரிவில்
சிக்கி மணந்து
வாசம் விட்டு
மாலை நேரத்தில்
வாடிபோனது அன்று...







உந்தன் நினைவுக்காக
நீ சூடிவந்த
சிவப்புரோஜா பூவை
புத்தகத்தின் மத்தியில்
பாடம் செய்து
காத்து வைத்திருந்தேன்
அவற்றின் இதழ்களும்
காணாமல்போனது இன்று....


வாடாத மல்லியாம்
வாடாமல்லி பூவும்
வாடிவிட கண்டேன்
சிலமணி துளிகளில்...
வாடினாலும் வீசும்
வாசம்கொண்ட தாழம்பூவும்
வசந்தம் இருந்தும்
மணமற்றுபோனது ஏனோ?

0 comments: