Sunday, January 24, 2010

சுமையா? சுகமா?

உன்னை சுமக்கும்வலிமை
என்தோள்களுக்கு இல்லையென
நினைத்தாயோ?
உன்னை இதயத்திலும்
என்கண்களிலும் இல்லையில்லை
என்உடல் முழுவதும்
சுமந்தபடியே நொடிபொழுதும்
என்உலகையே சுற்றிசுற்றி
வலம்வந்து கொண்டிருப்பதை
அறியமாட்டாயோ?


உன்னை சுமந்து நடந்தபோது
உண்டாகிய வலியை விட
உன்னை மறக்க நினைக்கும்பொழுது
உண்டாகும் வேதனையை சொல்ல வார்த்தையில்லை...

சுமையை சுமக்கலாம்
சுமையே(நீ) இல்லாமல்
சுமக்கின்றேன் உன் நினைவை
சு(மை)வையாய் இதயத்தில்...

2 comments:

Pinnai Ilavazhuthi said...

//உன்னை சுமந்து நடந்தபோது
உண்டாகிய வலியை விட
உன்னை மறக்க நினைக்கும்பொழுது
உண்டாகும் வேதனையை சொல்ல வார்த்தையில்லை//
நல்ல வரிகள்... வேதனையை வார்த்தைகளில் வடிப்பதும் ஒரு வேதனை தான் (எழுத்துக்கள் கிடைக்காத போது)
verification code - நீக்கி விடுங்கள், உங்களுக்கு கருத்து சொல்ல எளிதாக இருக்கும்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இளவழுதி,

கவிதையாய் வடித்துக்கொண்டே இருக்கின்றேன் என் வேதனையை.
தினமும் பூத்துக்கொண்டே இருக்கின்றாள் என் நினைவில்.

உங்கள் விண்ணப்பத்தை விரைவில் செய்துவிட முற்படுக்கின்றேன்.

நன்றிகள் பல... தொடர்ந்து உங்கள் விமர்சனங்களை எதிர்நோக்கி...

இவன்,
தஞ்சை.வாசன்