Thursday, January 21, 2010

சுகமும் நீயே என் சோகமும் நீயே






கோடையில் வற்றிவிடும்
நீரோடையை போல் சுகத்தையும்
 
என்றும் வற்றாத
நீர்கங்கையை போல் சோகத்தையும்

வறண்டு போகும்
என்நாக்கை போல் சுகத்தையும்
திரண்டு வரும்
என்தமிழை போல் சோகத்தையும்




தினம் உதிரும்
உன்நினைவை போல் சுகத்தையும்
என்றும் உதிராத
உன்கூந்தலை போல் சோகத்தையும்


காலத்தில் அழியும்
வனப்பை போல் சுகத்தையும்
தீயால் அழியாத
வடுவை போல் சோகத்தையும்

சுண்டினால் சிதறும்
இலைநுனியின் பனியைபோல் சுகத்தையும்
சிரித்தாலும் சிதறாத
இதழில்மறையும் பற்களைபோல் சோகத்தையும்



ஏழைபசியை தீர்க்கும்
ஒருவேளை உணவைபோல் சுகத்தையும்
என்றென்றும் தீராத
ஒற்றுமை உணர்வைபோல் சோகத்தையும்

இதனைபோல் எத்தனையோ
அவளால் அடைந்தேன்

சுகத்தை சோகமாக்கிட
சோகத்தை சுகமாக்கிட
தூ(து)க்கத்தின் கன(நினை)வில்
அவள்வரவை கண்டேன்

0 comments: