Monday, March 29, 2010

குப்பைத்தொட்டி...


பத்துமாதங்கள் சுமக்காமலே
பத்து நொடிக்குள்ளே
பிள்ளை பெற்றெடுக்கும்
நவீன அன்னையே...
உன்னின் பாக்கியமும்
சிலருக்கு கிடைப்பதில்லை...
ஆனால் உனக்கு
கிடைத்த பாக்கியமும்
நிலைக்காமால் போவதேன்?
உன்னிடமிருந்து நான் பறிக்கப்பட்டு...

6 comments:

அண்ணாமலையான் said...

நிலைச்சா பாவம்தான்
நிலைக்காதது புன்னியம்.. சரியா?

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

சரிதான்...

நிலைத்தாலும் அந்த குழந்தைகளின் நிலை பாவம்.
நிலைக்காமல் வேறு எங்கோ சென்ற போதும் பாவமாய்...

Aathira mullai said...

சிந்தனைச் சிற்பி வாசன், ஒவ்வொரு கவிதையிலும் ஒரு சமுதாயச் சிந்தனையை அள்ளித் தெளிக்கிறீர்கள். நல்ல சிந்தனை. இது போன்ற படைப்புகளே இன்றைய தேவை..வாழ்க..வளர்க இது போன்ற தங்கள் புத்தம் புது சிந்தனைகள்... வாழ்த்துக்கள்....

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ஆதிரா,

தங்களின் வரிகளுக்கு, வாழ்த்துகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

தங்களை போன்றவர்களின் ஆதரவு தொடர்ந்து கிடைத்திட வேண்டுகின்றேன்.

கவிதன் said...

அற்புதம் நண்பரே!
நான் வெகுவாக ரசித்த கவிதைகளில் ஒன்று!!!
சிந்திக்க வைக்கிறது! வாழ்த்துக்கள்!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள கவிதன்,

எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்களின் வரிகளை படிக்கும் சமயம்.

நன்றி...