Monday, January 4, 2010

என்ன இது ?

பள்ளிபருவத்தில்
பார்த்து பேசிபிரிவதையே
காதல் என்றிருந்தேன்

கல்லூரிபருவத்தில்
காதலென்றால்
பழகிபிரிவது என்றிருந்தேன்

இளம்பருவத்தில்
பருகிபிரிவதையே
காதல் என்றிருந்தேன்

வாலிபபருவத்தில்
இன்று என்னால்
நம் உணர்வை
காதலென்பதா? - இல்லை
வாழ்கையின் ஒத்திகையென்பதா – அல்ல
என்னவென்று சொல்லமுடியாமல்
எப்படிசொல்வதென்று தெரியாமல்
தவி(துடி)த்துக்கொண்டிருக்கின்றேன்.

2 comments:

Anbinnayagan said...

தமிழை, கவிதையை, காதலை..நேசிப்பவர்களால் இனிய கவிதை எழுத முடியும்.. உங்களைப்போல..!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்பின் நாயகத்திற்கு,

தங்களின் வரிகளுக்கு மிக்க மிக நன்றி...

தமிழை, கவிதையை, காதலை போல உங்களை போன்ற நல்ல உள்ளங்களையும் நேசிப்பவன் நான் என்று கூறிக்கொள்ள விரும்பிக்கின்றேன்.

இவன்,
தஞ்சை.வாசன்