Tuesday, January 19, 2010

கனவா? நினைவா?


நேற்றுவரை
நீண்டநாளாக
கனவாக ஒன்றை
நினைவாக்க
மனதுக்குள் பத்திரமாக
புதைத்திருந்தேன்...

இன்று
என்னையும்
அறிந்தே அது
எங்கோ
மற(றை)ந்து போனது
வாழ்வில்...

நாளையும்
கனவு கனவாகிருப்பின்
புதைந்து அல்லது
மற(றை)ந்து போனாலென்ன
நினைவு கேட்டது
என்னிடம்...

என்றாவது
நேற்றுவரை அவள்(கனவு)
நாளையென்பது நீ(நினைவு)
என்று வரும்வரை
இன்றும் போராடுவேன் - என்றேன்
பதிலுக்கு...

(என்னை அடைந்த குறுச்செய்தியிலிருந்து என்வரிகளும் கலந்து)

2 comments:

Unknown said...

குறுஞ்செய்தியிலிருந்து ஒரு பெருஞ்செய்தியை தந்திருக்கின்றிர்கள்......

வாழ்த்துக்கள்.......

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள முரளிக்கு,

என் நன்றிகள் என்றும்...

இவன்,
தஞ்சை.வாசன்