Monday, February 8, 2010

பயணம்...

என் ஊர்பயணத்தில்...
நான்சென்ற புகைவண்டி உண்மையாய்
எய்தஅம்பாக முன்னால் விரைந்தடி.
அப்பொழுது,
நான்கண்ட காட்சியெல்லாம் பொய்யாய்
நகராமலே பின்னால் நகர்ந்தடி - ஆனால்
நான்மட்டும் இருக்கையிலே அமர்ந்திருந்தேனடி.

என் வாழ்கைபயணத்தில்...
காதலித்த பெண்ணே நீமட்டும்
மணமேடையேறி சபையோர்முன் மகிழ்ந்தாயடி
இங்குநான்,
கொண்ட நினைவுகளும் வேதனைகளும்
எனைகொன்ற பின்னும் நடமாடுகின்றேனடி - என்றும்
காதலாவது அழியாமல் வாழ்ந்திடுமென.

2 comments:

Anbinnayagan said...

இதயத்தின் உணர்வுகளை அற்புதமாக சொல்கிறது..இந்த கவிதை

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள அன்பின்நாயகனுக்கு,

நன்றி... தாங்களும் அதனை அவ்வாறகவே இங்கே கூறியமைக்கு.