Friday, February 19, 2010

காதலால் ஊனம்...



காதலில்
சரசம் கொள்ளும்
விரசத்தோடு என்னோடு
நீயே பழகியிருந்தாலும்
சல்லாபம் அடையும்
சலனத்தோடு உன்னோடு
நான் பழகி 
இருந்திருக்கமாட்டேன்.

தோள்களும் உடல்களும்
உரசுவதை எண்ணியிருந்தால்
உலகத்தில்
ஊதாரியாய் நானிருந்து
மகிழ்ச்சியோடு இன்றிருந்திருப்பேன்.

உள்ளங்களும் எண்ணங்களும்
ஒன்றாவதை கருதியதால் என்னவோ?
உள்ளம்
ஊனமாக்கபட்டு நான்
வேதனைகளோடு இன்றிருக்கின்றேன்.