Friday, February 12, 2010

உன் திருமண அழைப்பு...



சிவனே!
எத்தனையோ மனிதர்கள்
நெஞ்சத்தில் உனைவைத்து
நாள்தோறும் பூஜித்தபோதும்
கிடைக்காத வரத்தை...
எதிர்பாராமல்
உன்னருள் என்னவென்று
தெரியாமல் பிழைபோல்
வேடன்
செய்த்திட்ட செயல்தன்னில்
உள்ளம் குளிர்ந்தாய்
சிவராத்திரி எனும்நாளை
எங்களுக்கு வழங்கினாய்!




காதலியே!
எத்தனையோ ராத்திரிகள்
உள்ளத்தில் உனைநினைத்து
தினம் அன்பையாசித்தபோதும்
கிடைக்காத காதல்...
எதிர்பாராதபடி
உன்வாழ்கை அமைந்ததென
தெரிந்தே செய்தாய்
மனம்
செய்வது என்னவென்று
தெரியாமல் முடிவெடுத்தாய்
திருமணம் அழைப்பிதழை
எனக்கு அளித்தாயடி.

0 comments: