Tuesday, February 23, 2010

உண்மை அறிந்துகொள்ளடி...


உன்மேல் காதல் அரும்பியதும் உண்மை
உன்னை நான் விரும்பியதும் உண்மை.
உன்னை மனதில் வெறுப்பதும் உண்மை
உன்னோடு இனியும் வாழ விருப்பமில்லை.
உன் நினைவு சுவடுகளோடு மட்டும்
உலகில் வாழ விரும்புவது உண்மை.
உன்னை என் உயிரென கொண்டேன்
உன் வார்த்தைக்கும் உயிர் கொடுத்தேன்
என்னை உன் உயிரென கொள்வாயென.
என்னையும் என் அன்பையும் உதறி
என்னை உயிரோடு கொன்றாயே ஏன்?

5 comments:

வைகறை நிலா said...

நினைவுச் சுவடுகளோடு வாழ முடியுமா..என்ன?
அற்புதமான மனதை தொடும் கவிதை...

அண்ணாமலையான் said...

நல்ல கவிதை... பாராட்டுக்கள்..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

வைகறை நிலா மற்றும் அண்ணாமலையானுக்கு,

உங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள்...

தஞ்சை-முரளி said...

உண்மை அறிந்து கொள்ள என்ன இருக்கு?

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள முரளி,

அவள் நினைவுகளோடு நான் இருப்பது...